Shri Sudhaker Shukla , Ministry of Mines, Adviser speech in ASSOCHAM, Heavy Mineral Conference held on 09.12.2015 at New Delhi. He has highlighted that, according to the Govt., study total Rs. 65,000 Crores value Heavy Minerals are available in all the four states, Tamilnadu, Kerala, Andhra and Odisha.

தாது மணல் உற்பத்தியில் இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்றிய தமிழ்நாட்டின் விவி மினரல்

உலக தாது மணல் இருப்பில் 35 சதவீதம் இந்தியாவில் உள்ளது. ஆனால் ஏற்றுமதி அளவில் 1989-90 வரை இந்தியா உலக அளவில் 14-வது இடத்திலேயே இருந்தது. 1988-ல் விவி மினரல் இந்த தொழிலில் நுழைந்த பிறகு 1994-95-ல் இந்தியா உலக அளவில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. 1999 முதல் உலக கார்னட் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

இதனை கூறுவது இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அகில உலக அளவில் கனிம உற்பத்தி விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்து வெளியிடும் “ரோஸ்கில்” என்னும் அமைப்பு ஆகும்.

வி.வி.மினரல் நிறுவனம் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அரசின் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பெற்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

மேற்கு தொடர்ச்சி மலையில் பாறைகளில் கிடைக்கும் சில வகை அபூர்வ கனிமங்களான கார்னட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான் முதலியவை கால மாற்றத்தால் உடைந்து நொறுங்கி மணல் வடிவமாகி மலையில் இருந்து அடித்து வரப்படும் ஆறுகளால் கடலின் உள்ளே கொண்டு சேர்க்கப் படுகிறது. இவ்வாறு பலநூறு ஆண்டுகளாக கடலின் உள்ளே சேர்க்கப் பட்ட கனிமங்கள் கடல் மணலோடு சேர்ந்து கடற்கரையில் ஒதுக்கப் படுகிறது. இதற்கு கடலின் உள்ளே ஏற்படும் மின் மாற்றம், காற்றின் திசை, அலையின் அளவு முதலியவை காரணிகளாக அமைகின்றன. இவ்வாறு கடற்கரையில் உச்ச அலை காலத்தில் ஒதுக்கப் படும் கனிமங்கள் வெயிலில் உலர்ந்து அருகில் உள்ள பட்டா நிலங்களுக்கு காற்றால் அடித்து செல்லப் படுகிறது.

Photo 1

இவ்வாறு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்க்கப்படும் கனிமங்களை எடுப்பதற்கு மத்திய அரசின் முன் ஒப்புதலோடு கூடிய சுரங்க குத்தகையை மாநில அரசிடம் பெற்றுள்ளது. மேலும் சுரங்க திட்டத்தை இந்திய அரசிடம் அங்;கீகாரம் பெற்றுள்ளது. இந்திய அரசு சுற்றுச்சூழல் துறையில் இருந்து கடலோர மேலாண்மை விதிகளின் கீழ்; அனுமதி மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி முதலியவற்றை பெற்றுள்ளது.

வி.வி.மினரல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 25 சுரங்க குத்தகைகளில் 3 தவிர இதர 22 சுரங்க குத்தகைகள் விவி மினரல் நிறுவனத்தின் சொந்த பட்டா நிலம்.

இவ்வாறு உரிய அனுமதிகள் பெற்று குவாரி செய்யப்படும் தாது கனிம மணலில் இருந்து அபூர்வ தாது கனிமங்கள் பிரித்து எடுக்கப் பட்டு கழிவு மணல்கள் குவாரி செய்யப் பட்ட இடத்திலேயே நிரப்பி சமன் செய்யப் படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அல்லது மாசு அடைவதில்லை.

1

கடல் வேண்டாம் என்று வெளியே தள்ளும் தாது மணலை மட்டுமே எடுப்பதால் கடல் வளம் பாதிக்கப் படுவதில்லை. மேலும் இதை எலக்ட்ரோ மேக்னடிக் முறையில் தரம் பிரிப்பதால் இதற்கு ரசாயனமோ அல்லது அமிலங்களோ போன்ற எதுவும் உபயோகப் படுத்துவதில்லை.

உரிமம் வழங்கும் முன்பு உரிமம் கேட்கும் பகுதியை ஒட்டி மீனவர் குடியிருப்பு, விவசாய நிலங்கள், பழங்கால நினைவு சின்னங்கள் இல்லை என்பதை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே உரிமம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 81 சுரங்க குத்தகைகள் வழங்கப் பட்டுள்ளதில் இந்திய அரசு நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட 4 சுரங்க குத்தகைகள் தவிர 77 சுரங்க குத்தகைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு இந்திய அரசு பரிசு வழங்கியது. இந்த ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்தும் 3 நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றுமதிக்கான விருது வழங்கப் பட்டது. அதில் விவி மினரல் நிறுவனமும் ஒன்று.3 2

 

 

 

 

 

 

 

 

 

சுற்றுச்சூழல் பராமரிப்பதில் வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்கு

கடற்கரை அருகில் மணல் அள்ளி முடித்த இடங்களில் பசும் சோலையை உருவாக்கி உள்ளது. இந்திய அரசு சுரங்கத் துறை, இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் சார்பில் வழங்கும் “சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்பு சுரங்கம்” என்ற விருதை வி.வி.மினரல் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து பெற்று வருகிறது. இந்தியாவில் 5-ல் ஒரு பங்கு இடத்தில் கடலரிப்பு உள்ளது. ஆனால் வி.வி.மினரல் கனிம மணல் அள்ளும் பகுதிகளில் கடலரிப்பும் கிடையாது. சுனாமியாலும் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் கடலோர மேலாண்மை விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 

சமூகப்பணியில் வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்கு
வி.வி.மினரல் ஒவ்வொரு வருடமும் சுமார் 15000 ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தங்களையும் மற்றும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி மாணவர்களை கல்வி கற்க ஊக்கப்படுததி வருகிறது.

 

வி.வி.பொறியியல் கல்லூரியில் நன்கு படித்த மாணவர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கி மாணவர்கள் படிக்க ஊக்குவிக்கிறது. மின்வசதியில்லாத  கிராமத்தில் மாணவர்கள் படிக்கும் வகையில் இலவசமாக சோலர் லேம்ப் வழங்கி வருகிறது.

4

இது தவிர கடற்கரையோரமாக உள்ள இரண்டு ஊராட்சிகளில் இலவசமாக நவீன கழிப்பிடம் கட்டி கொடுத்து கிராம சுகாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்களில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பல வருடங்களாக பரிசுகளை வழங்கி கல்வியில் மேலும் சிறந்து வழங்க ஊக்குவிக்கிறது இந்நிறுவனம். பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறது.

மேலும் விவி மினரல் நிறுவனம் அமைத்துள்ள “கேரின்லி ஹெல்த் சென்டரில்” முழுநேர மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து அதன் பணியாளர் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அன்றி சுற்றுபுற கிராம ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ வசதியும் செய்து வருகிறது. ஆண்டுக்கு இருமுறை நெல்லையில் உள்ள “கேலக்ஸி” மருத்துவமனையோடு சேர்ந்து குத்தகை பகுதி அருகில் உள்ள கிராமங்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையையும் செய்து வருகிறது.

6

தொழிலாளர்களின் குடும்பத்தினர் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாகர்கோவிலில் உள்ள புகழ் பெற்ற ஜெயசேகரன் மருத்துவமனை உட்பட திருநெல்வேலிஇ தூத்துக்குடிஇ சென்னை உட்பட மொத்தம் 14 மருத்துவமனைகளோடு ஏற்பாடுகள் செய்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் இலவச மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் பணம் செலுத்தி 3 வகையாக அதிக பட்சம் 4 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது.
தாதுமணல்களின் உபயோகம்

மனிதன் கற்காலத்தில் இருந்து உலோக காலத்திற்கு மாறும் போதே கனிமங்களின் உபயோகம் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகத்தில் உணவு மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் தவிர அனைத்தும் கனிமங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே நாகரீக உலகத்திற்கு கனிமம் இன்றி அமையாதது. பேப்பர்இ பிளாஸ்டிக்இ வீடுகளுக்கு பூசும் வர்ணம்இ பீங்கான் கோப்பை வீடுகளுக்கு பதிக்கும் நவீன ஓடுகள் மற்றும் விமானம்இ ராக்கெட் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தும் பொருட்கள் முதலியவை இந்த கனிமங்களில் இருந்து தயாரிக்கப் படுகிறது.

பொருளாதார முன்னேற்றம்

புவி வெப்பமயமாதலாலும், பருவநிலை மாற்றத்தாலும், மழையின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் தென் மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்தித்து வந்துள்ளன. குறிப்பாக இராதாபுரம் தாலுகா ஒரு மழை மறைவு பிரதேசம். எனவே விவசாயம் இல்லை. பனை தொழில் இல்லை. பீடி சுற்றும் தொழிலும் தற்போது இல்லை. இப்பகுதி தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய பகுதி என மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி ஆகும். இப்பகுதியில் தாது மணல் தொழில் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.5

மத்திய அரசுக்கு 10 சதவீத ஏற்றுமதி வரி, 12 சதவீத உற்பத்தி வரி, 14 சதவீத சேவை வரி மற்றும் மாநில அரசுக்கு 3 சதவீத ராயல்டி, 5 சதவீத விற்பனை வரி போக கொள்முதல் செய்யும் இனங்களுக்கும் சேவை வரி, வாட் முதலிய வரி இனங்களை செலுத்தி வருவதோடு பல ஆயிரகணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இந்தியாவின் அத்தியாவசிய தேவையான அன்னிய செலவாணியும் ஈட்டி தருகிறது. உலகிலேயே முன்னணி உற்பத்தியாளராக திகழும் இந்தியாவில் தமிழகம் தான் தாது மணல் தொழிலில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பதும் அதற்கு வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்கும் உண்டு என்பதும் தமிழக மக்கள் அனைவருக்கும் பெருமை தானே.

நன்றி
தினத்தந்தி தொழில் மலர் 21.10.2015

 

image

 

INTENTIONAL DISSEMINATION OF FALSE ALLEGATIONS AGAINST V.V.MINERAL – AN EXPLANATION

INTENTIONAL DISSEMINATION OF FALSE ALLEGATIONS AGAINST V.V.MINERAL – AN EXPLANATION

(Link : https://www.facebook.com/saveearthcampaigns?fref=ts)

In the above shown link few exacerbated posts were wickedly registered against  V.V.Mineral. The reality of the posts were explained with the under shown documents. Based on that facebook has removed all the above said posts. Moreover crime action has been taken against the person who registers the posts. Since the false news has already been publicized all around in order to show the reality this   information is released.

 In the film Poiye Saatchi Actor Baghiyaraj acts as a false witness in a murder case. While entering the court after getting the money he acted emotionally and went to attack the accuse and his overwhelmed acting performance finally made the innocent man to get punished. Those complainants also were undoubtedly more genius in acting than Actor Baghiyaraj.

But according to V.V.Mineral, all over India V.V.Mineral is the prime Organization which has got all the statutory clearances as per rules and running business according to the legislative conditions. This can be known if any one visits the website of Ministry of Mines, Ministry of Environment and Forest.

Photographs published as Buildings are damaged due to beach sand mining in Uvari

 Pic -1

Source : http://kumaritamil.com/sea-erosion-in-niththiravilai/ )

Pic -2

The aforementioned photographs resembling areas were not adjacent to any of the V.V.Mineral Mines. All these photographs are taken from different places affected by coastal erosion. Prof: http://tnfidet.blogspot.in/2012/11/pictures.html

In fact the mining lease areas of V.V.Mineral do not contain any human settlements, buildings, fisherman boat station. After assuring this only the mining lease applications will be recommended by the authorities. In addition sea erosion is a general global problem. The main reason for erosion is sea level rise and the root cause of sea level rise is climate change. India totally has 7000 kilometer long stretch coast. Among this 20%, nearly   1400 kilo meter stretches are under erosion. There is no connection between sea erosion and beach sand mining because mineral sand are the rejects of the sea and beach sand mining areas are depositional areas hence at any point mining will never leads to sea erosion.

[Source: Letter from Directorate of Coastal Erosion, Government of India].

Pic 3

From the book “Voice for the Oceans” published by International Ocean Institute it is known that due to climate change world wide sea level rise and sea erosion are occurring and if these phenomenon are not controlled within 50 years major cities will face the problem of drowning.

(source:  Page no 7 and 9 attached for reference).

pic 4

Besides already various newspapers have published news about global warming induced sea erosion.

Pic -5

pic 6

In the absence of human settlements, hutments and buildings in the mineral sand mining areas of V.V.Mineral this kind of criticism reveals how these posts are purposeful. Like during our childhood in order to bunk the class we never said fever to the class teacher because we can easily got hold of if the teacher places her hand on us so we planed to say head ache and stomach pain those ailments cannot be checked.  Likewise since sea erosion is experienced worldwide they have thought that it would be fair if they integrate sea erosion and mineral sand mining and these are their fabricated stories. Sea erosion is a global phenomenon which can be explained by the following examples.

Pic 7

Source :

http://www.thehindu.com/news/national/kerala/major-sea-erosion-threatens-evacuation-near-ajanur-beach/article2333421.ece

http://www.thehindu.com/sci-tech/effects-of-sea-level-rise-on-tamil-nadu-coast/article892055.ece

As far as Tamil Nadu is concerned no mining leases are granted to private organizations in fishermen habitations and boat stations. But in Midalam, Keezhmidalam, Kurumpanai, Chinna vizhai, Periya Vizhai fishermen villages only Central Government owned Indian Rare Earth Ltd has been granted mining leases. In those mines mining and mineral sand collection are done by the fishermen population itself.

Moreover as per coastal regulation rules without CRZ clearance mining leases cannot be granted after 21.05.2002. V.V.Mineral has got mining leases after obtaining all the necessary clearances. That is why even during Tsunami none of their mining lease parts were affected.

Some times extreme wave and storm surges will be very high. By viewing the state alerting the fishermen and insisted them not to go for fishing is a common practice. This will also prove that the complaints were false and artificial.

Photographic proof for no human settlements in V.V.Mineral Mining lease areas is attached here under.

pic 8

Due to Tsunami a huge quantity of mineral sand has been ejected out by sea. Almost 70 percent of mineral sands are ejected out from sea during this period can be viewed in the following website which was told by Thiru. Victor Rajamanikam the person now giving interviews against V.V.Mineral for the money paid by Thiru Daya Devadas.

(Source : http://ramsethu.org/expert2.html)

In the settlement areas of Uvari village V.V.Mineral has no mining leases. This area also affected by extreme waves. These details were already brought to light with photographs by Daily Thanthi news paper on 12.09.2010. The proof is attached here under.

Pic 9

It is more important that whenever the settlements in Uvari village, Anthoniyar Church and Kappel Matha Church are affected by extreme waves as per the request from Father of the church and Panchayat Head, V.V.Mineral is saving the places from damages caused by extreme erosion by dumping their waste sand in the the places. In order to limit the effects of sea erosion in Uvari, fishermen population requested groynes  from the District Collector and based on the recommendation from the District Collector groynes construction work is commencing. Few day before some private news channels have flashed the news regarding the groynes were not built properly.

Pic 10

In Facebook a new campaign was spread as sea water has become red in Periyathalai due to mining activities of V.V.Mineral.

Pic 11

In fact V.V.Mineral is not having any mining lease in Periyathalai. On the contrary Indian Garnet Sand company running under the Director Thiru. Thanushkoodi Athithan and owner Thiru. Daya Devadas only has mining lease in Periyathalai (G.O No. 11, Ms.No.11, date 15.01.94). Further this photographs might have been taken from the northern areas of Trichendur. Because usually the sea between Tiruchendur and Punnakayal only be red in colour like this. We can see this while we go for Sasti to Trichendur Temple. But in these areas V.V.Mineral is not having any mining leases.

Please refer to the article published in Dinakaran News Paper 1st Jan 2012. (Source enclosed).

Pic 12

The photos taken in Uvari from Kappal Madha church and their boat parking areas are attached below, which will clearly reveal the sea water colour is no way different.

pic 13

Besides sea water colour change is quiet normal in various regions of the world due to various factors. (Proof attached below)

pic 14

Pic 15 Pic 16

Besides the following photographs were released as these buildings are wrecked by the mining activity of V.V.Mineral. But in reality these buildings are present in the mining village of Government company. Showing that photos they have done untruth campaign against V.V.Mineral.

Pic 17

It is pertinent to point out here that on the face book this picture was mentioned that Periyathalai in Tirunelveli District. In fact, Periyathalai is situated in Tuticorin District of Padukapathu village and V.V.Mineral has no mining lease and only Indian Garnet Sand Company belongs to Dayadevadas alone have mining lease vide G.O.Ms.No. 11  dated 15.01.94.

In Uvari Panchayat election Thiru. Antony Raj and Uvari St. Atony’s Higher Secondary school Head master Thiru Pavar Singh’s wife Mrs. Thembavani were contested. In the election Pavar Singh’s wife Mrs. Thembavani won and defeated Thiru. Antony Raj. Thiru Pavar Singh is V.V.Mineral Managing Director Vaikundarajan’s school friend. So,  Thiru. Antony Raj blame Thiru Vaikundarajan’s influence for his defeat and he started giving interviews and statements against V.V.Mineral and Thiru. Vaikundarajan. In fact Thiru Antony Raj has deceived large number of poor children and involved in huge amount fraudulent. Regarding this nearly 80 cases were filed in various police stations and he was arrested. At present a complaint was given by the Director of Fisheries department and case was filed against him regarding abuse of  the food substances and kerosene in general distribution plan and misused the money in Fishermen Cooperative Society.

In support of Mining Activities : It has to be noted that the following seven Panchayat presidents and the panchayat members along with the public had submitted a memorandum in support of these mining companies in the areas as the mining companies are the major source of employment for part of these villages.

The seven fishermen panchayats are :

  1. Koodankulam
  2. Kootapanai
  3. Uvari
  4. Kuthenkuzhi
  5. Idinthikarai
  6. Perumanal
  7. Kootapuzhi

Pic 18

The pictures does not belong to VVM mining areas and any where near our operations. But these operations are in Kerala State near Chavara by Central and State Government companies. So this is also clearly a false allegation against V.V.Mineral.

Among the mining leases granted to V.V.Mineral except six all the other leases are granted for mining in  their own patta lands. These patta lands are situated near the coast and are replenished with mineral sands by wind action. The following photos will prove the same.

Pic 19

The background of the false allegations

From 1988 onwards Thiru Dayadevadas  and V.V.Mineral are having enmity regarding accuring Korean customers. In 1988 itself Thiru Dayadevadas  has went to Korea and with his political influence he wish to atrract the customers. But the Korean customers has not changed from V.V. Mineral which was known for its quality and honesty. Proof : Telex

 

Pic 20

After all his efforts since the Korean customers were not modify their state in 1989 Thiru. Dayadevadas has written to Korea as V.V.Mineral is undertaking illegal mining (Proof : Letter)

Pic 21

He has written a number of complaints in various names. All the petitions were enquired and are quashed. So he changed his complaining method as a first step he registered a new company in the name Federation of Indian Placer Minerals and convinced people to agree that as a  Federation and started writing complaints from the frederation. In this regard CBI has ordered company registrar to take necessary actions. (Proof: given below)

Pic 22

In fact Thiru Dayadevadas only carried out ill legal mining. But by using his political power he is continuously disturbing their business rival V.V.Mineral. Number of times he has got hold of by the authorities for illegal mining and penalty and punishment fee has been destined. The order copy of penalty destined to Thiru Dayadevadas by Authorities after discovering the fact that the company has quarried 12000 tons sand  by paying royalty for 4000 tons.

Pic 23

After that also Thiru. Dayadevadas has involved in Mega mineral scandal by paying only 3 lakhs royalty he has quarried for 39 lakhs priced mineral sand.That was also found out by the authorities and legislative actions have been taken and his mining leases were cancelled. http://www.beachminerals.org/large-scale-illegal-mining-major-violations-tamilnadu-govt-determine-mining-lease-granted-southern-enterprises-belongs-dayadevadas-claim-president-federation-o/

 

Untitled

In order to get rid of from the cases and legislative actions and to take revenge on V.V.Mineral and to dissociate the customers of V.V.Mineral  by his richness and political power he made few retired officers to give untruth  interviews in few private news channels and intentionally disseminate false allegation against V.V.Mineral. All these allegations were thoroughly investigated by the authorities and reported as false. For example by using Thiru. Sundaram IAS a big complaints was filed and in news papers and television mega interviews were given by the officer, Finally the joint inspection team of State and Central Government investigated the  complaint of Sundaram IAS  and reported that it is a fake complaint. The copy of the report is available in  http://www.beachminerals.org/wild-allegations-leveled-v-v-mineral-v-sundaram-ias-found-wrong-motive-envy-vindictive-far-away-truth/ . This copy was obtained under RTI Act from the Indian Government.

People like Thiru.Sundaram, Victor Rajamanikam  are working for Dayadevadas and for his sake they are filing fake complaints and all of them are an illegal conspiracy gang members. The detail is available in the website www.beachminerals.org and link http://www.beachminerals.org/video-home/.

In the aforesaid video itself  the retired IAS officer Sundaram said that he has made Thiru. Ashish Kumar to write the complaint against V.V.Mineral. Hence the District Collector Ashish Kumar’s report is also intentionally fabricated  fake report. All these informations were gathered after great struggle and arguements from various Goverment offices and Tamil Nadu Information Authority, V.V.Mineral Thiru S.Vaikundarajan has already filed petititon to the Tamil Nadu government  to demand crime case against   Thiru. Ashish Kumar.  The aforesaid petition and enclosures are available in the link  http://www.beachminerals.org/complaint-ashish-kumar-ias-making-false-report-v-v-mineral-part/

In addition in facebook one friend Vetri vel has registered four posts on 08.03.2015 regarding the background for Thiru Ashish Kumar’s report https://www.facebook.com/iruthayaannai/posts/799585323454858. This can also be viewed for clarification. Moreover to prove the fact that Ashish Kumar IAS report was prepared with an intention, an elaborate post with all the required documents like this will be registered very soon.

As per the information at persent the petition was interrogated by the vigilance department  and the files are taken under custody and a crime case was filed against Ashish Kumar IAS and an extensive interrogation has been going on.

Even then from time to time they pick up some journalist and made them to publish fake informations by giving money. Knowing that legal actions were taken and the news papers were given clarifications in their newspapers. Based on our complaint a vast number of facebook posts were deleted from the facebook after verifing the proof. Recently also using Mrs Sinthiya Ravichandran associated within this bandit gang it was made to write as  one lakh crore scadal in a news paper and based on that they made various political parties to release striking comments against the Government for an CBI investement. Finally when legal notice were sent  and legal action was started the aforesaid news paper in their news paper itself published that the news they have released is wrong and it was published without reviewing proper evidence based on a pending rit petition only they have published the news and they simply end as we regret for the error. Economic Times news paper also on 17.05.2015  release regret note for the mistake. So medias in order to increase their viewers circle are often publishing exaggerated news. (Proof : Below)

Pic 24

The question may arise why you are showing objections  for CBI and other enquires. The fact is other nation’s law and order is not like India. V.V.Mineral is exporting their goods to developed countries and western countries like Europe and America. As per the law of their country if there is any enquiry pending against the exporting company those countries could not purchase any goods from such companies. So if they get order for these types of enquires the 25 years strive of the people to stop the sale and market of V.V.Mineral can be achieved. With this intention only with the help of various politicians, journalists and retired officers for business rivality Dayadevadas is doing these activities.

This universe has disciples who betrayed Jesus Christ for just 30 silver coins. Hence there is no marvel about retired officers writing complaints, giving interviews for the lakhs of money blowed by Thiru Dayadevadas. But as stated by friend Vetrivel they are selling their knowledge for money. They never say in any of the complaint that V.V.Mineral has illegally mined in this particular survey no. or village or complaint as mismatch in the royalty paid and sand quarried and here is the proof but continuously say like a broken tape recorder illegal mining  and illegal mining. The reason for their loudness is to made the government officials to relinquish their illegal activities.

But V.V.Mineral Organization is a legal organization. It has not done any illegal activities.  That is why this organization has received Best Exporter award continuously for the past twenty one years from the Indian Government. For the past ten years they have been receiving the Highest Exporter Award from the Tuticorin Port Trust. For getting this award nothing can be done against the rules because these awards are released after acknowledged by eighteen departments. This is the reason why they have changed their initial campaign illegal mining to thorium rich monazite was exported by V.V.Mineral.

In fact monazite cannot be exported. Customers will not accept goods containing Monozite. In addition the customs officers will allow import and export from the port after checking all the import and export goods for monazites and other radioactive substances. They are having all the required instruments. Moreover if radioactive substances are present in the ship it will cause danger to the sailors.  So radiation alarm facilities are available in the ship hence radioactive substances cannot be exported knowingly or unknowingly. Besides except India in all the foreign countries the price of monazite is cheap. Hence Indian government also has stopped producing monazite from 2004 itself. This can be verified in the parliament answer for Prime minister by the Rajyasabha to the question no. 420 on 26.11.2014 (Link: http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=111923).

All these explanations are published to put a full stop for all the planned fake campaign against V.V.Mineral and Thiru. Vaikundarajan.

For further details contact V.V.Mineral website. Facebook viewers can log on to VV Mineral News Release, www.southernmines.org, www.coastalenvironment.org. And we are always ready to give any other information required.

வி.வி.மினரலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்ப படுவது பற்றி ஒரு விளக்கம்

வி.வி.மினரலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்ப படுவது பற்றி ஒரு விளக்கம்

(Link : https://www.facebook.com/saveearthcampaigns?fref=ts)

மேற்கண்ட இணைப்பில் வி.வி.மினரலுக்கு எதிராக மிகவும் மோசமான நிலையில் சில பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. அது பற்றி உண்மை நிலவரத்தை கீழ்கண்ட ஆவணங்களோடு எடுத்துரைத்து அதன் அடிப்படையில் முகநூலில் இருந்து மேற்கண்ட பதிவுகள் முழுவதும் நீக்கப் பட்டு விட்டன. மேலும் மேற்கண்ட பதிவு செய்த நபர் மீதும் காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஏற்கனவே பொய் செய்தி பரப்பப் பட்டதால் உண்மை நிலவரம் தெரிவதற்காக இந்த விபரம் வெளியிடப்படுகிறது.

நடிகர் பாக்கியராஜ் நடித்த பொய் சாட்சி திரைப்படத்தில் ஒரு கொலை வழக்கில் பொய் சாட்சி சொல்வதற்காக பாக்கியராஜ் பணம் பெற்று கொண்டு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் போது உணர்ச்சி வேகத்தில் குற்றம் சாட்டப் பட்டவரை நீதிமன்றத்தில் வைத்தே தாக்க முற்படுவது போல் நடித்து இறுதியில் அந்த அப்பாவிக்கு தண்டனை பெற்று கொடுப்பார். இந்த புகார் கூறியவர்கள் நடிப்பில் பாக்கியராஜை விட திறமைசாலிகள் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் வி.வி.மினரல் நிறுவனத்தை பொறுத்த வரையில் அகில இந்தியாவிலும் அனைத்து சட்டபூர்வ அனுமதிகளையும் முறைப்படி பெற்று சட்டத்திற்கு உட்பட்டு தொழில் நடத்தும் நிறுவனத்தில் வி.வி.மினரல் நிறுவனமே முதன்மையானது. இதனை இந்திய அரசு சுரங்க துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனத்துறை ஆகியவற்றின் இணையதளங்களை பார்வையிட்டாலேயே இது தெரியும்.

தாதுமணல் சுரங்கத்தால் உவரியில் கட்டிடங்கள் சேதம் என காட்டி வெளியிடப்பட்ட புகைப்படங்கள்

 Pic -1

Source : http://kumaritamil.com/sea-erosion-in-niththiravilai/ )

Pic -2

மேற்கண்ட புகைப்படங்கள் போன்ற எந்த பகுதியும் வி.வி.மினரல் சுரங்க குத்தகை பகுதி அருகில் இல்லை. இவை அனைத்தும் பல்வேறு பகுதிகளில் கடலரிப்பால் பாதிக்கப் பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஆதாரம்http://tnfidet.blogspot.in/2012/11/pictures.html

உண்மையில் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை வழங்கப்பட்டுள்ள எந்த பகுதியிலும் குடியிருப்போ கட்டிடங்களோ அல்லது மீனவர்கள் வள்ளம் நிறுத்தும் இடங்களோ போன்ற எதுவும் இல்லை. இவை அனைத்தையும் உறுதி செய்து தான் அதிகாரிகள் குத்தகை வழங்க பரிந்துரையே செய்வார்கள். மேலும் கடலரிப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு பொது பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் கடல் நீர் மட்டம் உயர்வது. இந்த கடல் நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம் (Climate Change). இந்தியாவில் 7000 கிலோ மீட்டர் கடற்கரை உண்டு. அதில் 20 சதவீதம் அளவிற்கு அதாவது 1400 கிலோ மீட்டர் அளவிற்கு கடலரிப்பு உள்ளது. தாதுமணல் எடுப்பதற்கும் கடலரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால் கடல் வேண்டாம் என்று வெளியே கொண்டு தள்ளும் தாது மணலே எடுக்கப் படுகிறது. எனவே எந்த நிலையிலும் கடலரிப்பு வரவே செய்யாது.

[Source: Letter from Directorate of Coastal Erosion, Government of India].

Pic 3

பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் கடல் நிலை நீர் மட்டம் உயர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் இன்னும் 50 ஆண்டுகளில் பெரிய நகரங்களே கடலில் மூழ்கி விடும் என்பதும்  International Ocean Institute வெளியிட்டுள்ள ““Voice for the Oceans” என்ற புத்தகத்தில் தெரிய வருகிறது.

(source:  Page no 7 and 9 attached for reference).

pic 4

மேலும் புவி வெப்பமயமாதலால் இந்த கடலரிப்பு முதலியவை ஏற்படுகிறது என்பதை ஏற்கனவே பத்திரிக்கைகளும் வெளியிட்டு உள்ளன.

Pic -5

pic 6

தாது மணல் அள்ளும் இடங்களில் குடியிருப்போ வீடுகளோ இல்லாத நிலையில் இந்த குற்றச்சாட்டு எவ்வாறு உள்நோக்கம் கொண்டது என்பதை நிரூபிக்கும். அதாவது சிறுவயதில் பள்ளி கூடத்தில் பொய்யாக விடுமுறை எடுக்க நாம் காய்ச்சலை சொல்ல மாட்டோம். ஏனென்றால் ஆசிரியர் கைவைத்து பார்த்து விடுவார். ஆனால் தலைவலி அல்லது வயிற்றுவலி என்று சொன்னால் இவ்வாறு கைவைத்து பார்க்க முடியாது. இவ்வாறு உலகம் முழுவதும் கடலரிப்பு இருப்பதால் கடலரிப்பு என சொன்னால் நியாயமாக இருக்கும் என இட்டு கட்டிய கதை தான் தாது மணலால் கடலிரிப்பு என்பது. உலகம் முழுவதும் கடலரிப்பு உண்டு என்பதற்கு உதாரணம் கீழே.

Pic 7

Source :

http://www.thehindu.com/news/national/kerala/major-sea-erosion-threatens-evacuation-near-ajanur-beach/article2333421.ece

http://www.thehindu.com/sci-tech/effects-of-sea-level-rise-on-tamil-nadu-coast/article892055.ece

 தமிழகத்தை பொறுத்த வரையில் மீனவர்கள் குடியிறுப்புகளிலோ அல்லது மீனவர்கள் வள்ளம் நிறுத்தும் இடங்களிலோ எந்த தனியாருக்கும் சுரங்க குத்தகை வழங்கப் படவில்லை. மிடாலம், கீழ்மிடாலம், குரும்பனை, சின்னவிளை, பெரியவிளை ஆகிய மீனவ கிராமங்களில் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திற்கு தான் சுரங்க குத்தகை வழங்கப் பட்டுள்ளது. அங்கு சுரங்க பணி செய்து மணல் அள்ளி கொடுப்பதே மீனவர்கள் தான்.

மேலும் கடலோர மேலாண்மை விதியின் கீழ் இந்திய அரசின் CRZ Clearance இல்லாமல் 21.05.2002-க்கு பிறகு எந்த சுரங்க குத்தகையும் வழங்கப்பட முடியாது. வி.வி.மினரல் நிறுவனம் இவ்வாறு எல்லா அனுமதிகளும் பெற்று சுரங்க குத்தகை பெற்றுள்ளதால் தான் சுனாமியின் போது கூட வி.வி.மினரல் நிறுவனத்தின் எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை.

சில நேரங்களில் கடல் சீற்றம் வேகமாக இருக்கும். இதனை எல்லாம் பார்த்து கடல் சீற்றம் இன்று அதிகமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுவது வழக்கம். இதுவும் இந்த புகார்கள் பொய் என்பதை நிரூபிக்கும்.

 

வி.வி.மினரல் சுரங்க குத்தகை பகுதியில் எந்த குடியிருப்பும் இல்லை என்பதை காட்டும் புகைப்படம் கீழே இணைக்கப் பட்டுள்ளது.

pic 8

சுனாமியால் ஏராளமான தாது மணல்கள் கடலால் வெளியே தள்ளப் பட்டுள்ளது. சுமார் 70 சதவீத அளவிற்கு கூட தாது மணல் வெளியே தள்ளப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட இணைப்பில் தற்போது வி.வி.மினரலுக்கு எதிராக திரு.தயாதேவதாசிடம் பணம் வாங்கி கொண்டு பேட்டி கொடுக்கும் திரு.விக்டர் ராஜமாணிக்கமே அப்போது கூறியதை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

(Source : http://ramsethu.org/expert2.html)

உவரி மீனவ கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு எந்த சுரங்க குத்தகையும் இல்லை. கடல் சீற்றத்தால் இப்பகுதி பாதிக்கப்படுகிறது. இந்த விபரங்கள் 12.09.2010 அன்று தினத்தந்தி பத்திரிக்கையில் புகைப்படத்தோடு வெளிவந்தது. அது கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

 

Pic 9

இன்னும் முக்கியமானது உவரி அந்தோனியார் கோவில் மற்றும் கப்பல் மாதா கோவில் மற்றும் அங்குள்ள குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்படும் போது அங்குள்ள பங்கு தந்தை மற்றும் பஞ்சாயத்து தலைவர் வேண்டுகோளின் படி வி.வி.மினரல் நிறுவனத்தில் இருந்து தான் கழிவு மணல் அங்கு கொண்டு சென்று தட்டப்பட்டு கடலரிப்பால் அதிக சேதாரம் ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. கடல் சீற்றத்தால் உவரி பாதிக்கப்படாமல் தடுக்க தூண்டில் வளைவு வேண்டும் என மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரை படி அரசு தூண்டில் வளைவு அமைக்க ஆணையிட்டு தற்போது அந்த வேலையும் நடந்து வருகிறது. தூண்டில் வளைவு சரியாக அமைக்கப்படவில்லை என்பது பற்றி கூட சில தினங்களுக்கு முன்பு சில தனியார் தொலைகாட்சியில் செய்தி வெளியானது.

Pic 10

முகநூலில் பெரியதாழையில் வி.வி.மினரல் மணல் அள்ளுவதால் கடல் நீர் சிகப்பாகி விட்டது என்ற ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

Pic 11

உண்மையில் பெரியதாழையில் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகையே கிடையாது. மாறாக பெரியதாழையில் திரு.தனுஷ்கோடி ஆதித்தன் இயக்குனராக இருந்து திரு.தயாதேவதாஸ்க்கு உரிமை உள்ள இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனிக்கு மட்டுமே சுரங்க  குத்தகை உள்ளது. (அரசாணை எண் 11 தொழிற்துறை நாள் 15.01.94). மேலும் மேற்கண்ட படம் திருச்செந்தூருக்கு வடபுறம் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் திருச்செந்தூரில் இருந்து புன்னக்காயல் வரை உள்ள கடற்கரை பகுதி மட்டுமே இம்மாதிரி சிகப்பு நிறத்தில் இருக்கும். இதை திருச்செந்தூர் கோவிலுக்கு சஷ்டி காலத்தில் செல்லும் போது பார்க்கலாம். இப்பகுதிகளிலும் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு எந்த சுரங்க குத்தகையும் இல்லை.

Please refer to the article published in Dinakaran News paper 1st Jan 2012. (Source enclosed).

Pic 12

The photos taken in Uvari from Kappal Madha church and their boat parking areas are attached below, which will clearly reveal the sea water colour is no way different.

pic 13

மேலும் பல்வேறு காரணிகளால் கடல் நீர் நிறம் மாறுவது வழக்கம். இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும். ஆதாரம் கீழே.

pic 14

Pic 15 Pic 16

மேலும் கீழ்கண்ட புகைப்படத்தை வெளியிட்டு வி.வி.மினரல் தாது மணல் அள்ளுவதால் இந்த கட்டிடங்கள் இடிந்து விட்டன என வெளியிட்டார்கள். உண்மையில் இது இந்திய அரசு நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை உள்ள கிராமத்தில் உள்ளது. அந்த படத்தை போட்டு வி.வி.மினரலுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்தார்கள்.

Pic 17

It is pertinent to point out here that on the face book this picture was mentioned that Periyathalai in Tirunelveli District. In fact, Periyathalai is situated in Tuticorin District of Padukapathu village and V.V.Mineral has no mining lease and only Indian Garnet Sand Company belongs to Dayadevadas alone have mining lease vide G.O.Ms.No. 11  dated 15.01.94.

உவரி பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு திரு.அந்தோனிராய் என்பவரும் உவரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பவர்சிங் என்பவர் மனைவி திருமதி தேம்பாவணி என்பவரும் போட்டியிட்டார்கள். இதில் திரு.பவர்சிங் மனைவி வெற்றி பெற்றார். அந்தோனிராய் தோல்வி அடைந்தார். திரு.பவர்சிங் வி.வி.மினரல் வைகுண்டராஜனின் உயர்நிலைப்பள்ளி வகுப்பு தோழர். எனவே திரு.அந்தோனிராய் வைகுண்டராஜன் தான் செல்வாக்கை உபயோகித்து தன்னை தோற்கடித்து விட்டதாக எண்ணி வைகுண்டராஜனுக்கும் வி.வி.மினரலுக்கும் எதிராக பேட்டி கொடுப்பது, அறிக்கை கொடுப்பது என செய்து வருகிறார். உண்மையில் அந்தோனிராய் ஏராளமான ஏழை குழந்தைகளை ஏமாற்றி பெரும் தொகை மோசடி செய்தவர். இது சம்பந்தமாக சுமார் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு ஏராளமான வழக்குகளில் அவர் கைதும் செய்யப் பட்டு உள்ளார். தற்போது மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பொது வினியோக திட்டத்திற்கு உள்ள உணவு பொருள் மற்றும் மண்ணென்ணெய்யை விற்பனை செய்து அந்த தொகையை கையாடல் செய்து விட்டார் என மீன் வளத்துறை உதவி இயக்குனர் புகார் கொடுத்து அதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

In support of Mining Activities: It has to be noted that the following  Seven Panchayat presidents and the panchayat members along with the public had submitted a memorandum in support of these mining companies in the area as the Mining companies are the major source of employment for part of these villages.

The seven fishermen panchayats are :

  1. Kooduthalai
  2. Kootapanai
  3. Uvari
  4. Kuthenkuzhi
  5. Idinthikarai
  6. Perumanal
  7. Kootapuzhi

Pic 18

The pictures are doesn’t belong to VVM mining areas and any where near our operations. But these operations are in Kerala State near Chavara by Central and State Government companies. So this is also clearly a false allegation levelled against V.V.Mineral.

வி.வி.மினரல் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள சுரங்க குத்தகைகளில்  ஆறு குத்தகைகள் தவிர இதர அனைத்தும் அவர்களது சொந்த பட்டா நிலத்தில் வழங்கப் பட்டுள்ளது. இது கடற்கரை அருகில் இருக்கும். ஆனால் காற்று இப்பகுதியில் கனிமங்களை சேகரித்து கொடுக்கும். கீழே உள்ள படம் இதனை நிரூபிக்கும்.

Pic 19

இந்த பொய் புகார்களின் பின்னணி

திரு.தயாதேவதாஸ் என்பவருக்கும் வி.வி.மினரலுக்கும் கொரியாவில் உள்ள ஒரு வாடிக்கையாளரை பிடிப்பது சம்பந்தமாக 1988 முதலே பகை உண்டு. திரு.தயாதேவதாஸ் 1988-லேயே கொரியாவிற்கு சென்று அரசியல் பலத்தோடு அங்குள்ள வாடிக்கையாளரை கவர நினைத்தார். ஆனால் கொரியா வாடிக்கையாளர் தரத்திற்கும் நேர்மைக்கும் பெயர் போன வி.வி.மினரல் நிறுவனத்தை விட்டு மாறவில்லை. ஆதாரம் : டெலக்ஸ்

Pic 20

அதன் பிறகும் கொரிய வாடிக்கையாளர்கள் வி.வி.மினரலை விட்டு மாறாததால் வி.வி.மினரல் இல்லீகல் மைனிங் செய்கிறார்கள் என 1989-லேயே தயாதேவதாஸ் கொரியாவிற்கு கடிதம் எழுதினார். ஆதாரம் : கடிதம் :

Pic 21

பல்வேறு பெயர்களில் ஏராளமான புகார் மனுக்கள் எழுதினார். அனைத்து புகார்களும் விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே புகார் முறையை மாற்றி பெடரேசன் ஆப் இந்தியன் பிளேசர் மினரல் இன்டஸ்ட்ரி என ஒரு கம்பெனியை பதிவு செய்து அதனை பெடரேசன் என நம்ப செய்து புகார் எழுதினார். இது சம்பந்தமாக சிபிஐ உரிய விசாரணை நடத்த கம்பெனி பதிவாளருக்கு உத்தரவிட்டது. ஆதாரம் :

Pic 22

உண்மையில் திரு.தயாதேவதாஸ் தான் சட்டபுறம்பாக சுரங்க பணி செய்தவர். ஆனால் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி தொழில் போட்டியாளரான வி.வி.மினரலுக்கு இடையூறு செய்வதை தொடர்ந்து கடைபிடித்து வருபவர். பல்வேறு முறை சட்டவிரோத சுரங்க பணிகளில் இவர் ஈடுபட்டு அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிக்கப் பட்டு உத்தரவு பிறப்பிக்க காலதாமதம் செய்தாலும் கூட இறுதியில் இவருக்கு அபராதம் தண்டதொகை முதலியவை விதிக்கப்பட்டுள்ளன. 4000 டன்னுக்கு ராயல்டி செலுத்தி விட்டு 12000 டன் குவாரி செய்து கொண்டு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்து அபராதம் பிறப்பித்த உத்தரவு இணைப்பு :

Pic 23

அதன் பிறகும் தயாதேவதாஸ் மெகா கனிம கொள்ளையில் ஈடுபட்டு சுமார் 3 லட்சம் டன்னுக்கு ராயல்டி செலுத்தி விட்டு 39 லட்சம் குவாரி செய்து கொண்டு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்து அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அவரது சுரங்க குத்தகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. http://www.beachminerals.org/large-scale-illegal-mining-major-violations-tamilnadu-govt-determine-mining-lease-granted-southern-enterprises-belongs-dayadevadas-claim-president-federation-o/

Untitled

மேற்கண்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவும் வி.வி.மினரல் நிறுவனத்தை பழிவாங்கவும் அதன் வாடிக்கையாளர்களை சிதறடிக்கவும் சில ஓய்வு பெற்ற அலுவலர்களை தனது பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் கையில் எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து சில தனியார் தொலைகாட்சிகளில் உண்மைக்கு புறம்பான பேட்டிகளை கொடுக்க வைத்து வி.வி.மினரலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வந்தார். அவையும் அதிகாரிகளால் தீவிர விசாரணைக்கு பிறகு பொய் என்பது அறிக்கை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக திரு.சுந்தரம் ஐஏஎஸ் என்பவரை வைத்து ஒரு பெரிய புகாரை கொடுக்க வைத்து பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சிகளிலும் பெரிய பேட்டிகள் கொடுத்தார். ஆனால் திரு.சுந்தரம் புகாரின் பேரில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் கூட்டு ஆய்வு செய்து திரு.சுந்தரத்தின் புகார் பொய் என்பதை இந்திய அரசுக்கு அறிக்கை செய்தார்கள். மேற்கண்ட அறிக்கை நகல் http://www.beachminerals.org/wild-allegations-leveled-v-v-mineral-v-sundaram-ias-found-wrong-motive-envy-vindictive-far-away-truth/  இணைப்பில் உள்ளது.  இதனை இந்திய அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் தருவித்து பார்த்துக் கொள்ளலாம்.

திரு. சுந்தரம், விக்டர் ராஜமாணிக்கம் போன்றோர் தயாதேவதாசிடம் பணியாற்றுகிறார்கள் என்பதும் அவருக்காக இவர்கள் பொய் புகார்கள் கொடுக்கிறார்கள் என்பதும் இவர்கள் எல்லாம் இந்த சட்ட விரோத சதி கும்பலின் உறுப்பினர்கள்; என்பதும் www.beachminerals.org இணையத்தில் உள்ள http://www.beachminerals.org/video-home/  என்ற இணைப்பில் உள்ளது.

மேற்கண்ட வீடியோவிலேயே திரு.ஆஷிஷ்குமாரை நான் தான் புகார் எழுத வைத்தேன என திரு.சுந்தரம் ஐஏஎஸ் ஓய்வு கூறுவதை காணலாம். எனவே ஒரு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரின் அறிக்கையும் உள்நோக்கத்தோடு பொய்யாக தயாரிக்கப்பட்டது. இது பற்றிய விபரங்களை பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையர் மூலமும் போராடி வாதாடி பெற்று திரு.ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர அனுமதி கேட்டு வி.வி.மினரல் திரு.வைகுண்டராஜன் அரசுக்கு ஏற்கனவே மனு அனுப்பி உள்ளார். மேற்கண்ட மனு மற்றும் இணைப்புகள்  http://www.beachminerals.org/complaint-ashish-kumar-ias-making-false-report-v-v-mineral-part/ உள்ளது. திரு.ஆஷிஷ்குமாரின் அறிக்கையின் பின்னணி என்ன என்பதை நண்பர் வெற்றிவேல் என்பவர் அவரது முகநூலில் 2015 மார்ச் 8 அன்று நான்கு பதிவுகளாக https://www.facebook.com/iruthayaannai/posts/799585323454858 வெளியிட்டுள்ளார். அதனையும் பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஆஷிஷ்குமார் ஐஏஎஸ் அறிக்கை உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டது என்பதற்கு இதே போல் ஆவணங்களோடு விரிவான ஒரு பதிவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

தற்போதைய தகவல் படி மேற்கண்ட மனு லஞ்ச ஒழிப்பு துறையால் விசாரிக்கப் பட்டு தொடர்புடைய கோப்புகள் கைப்பற்றப்பட்டு ஆஷிஷ்குமார் ஐஏஎஸ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.

ஆனாலும் கூட அவ்வப்போது காசுக்கு விலைபோகும் சில பத்திரிக்கையாளர்களை பொறுக்கி எடுத்து பொய்யான தகவலை கொடுத்து சில செய்திகளை வெளியிட செய்கிறார்கள். தகவல் தெரிந்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து அதற்கு மறுப்பு செய்திகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. ஏராளமான தவறான பதிவுகள் எங்களது ஆதாரபூர்வமான புகாரின் அடிப்படையில் பரிசீலனைக்கு பிறகு சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.  சமீபத்தில் கூட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என இந்த கொள்ளை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திருமதி சந்தியா ரவிச்சந்திரன் என்பவரை வைத்து ஒரு பத்திரிக்கையில் செய்தியை வெளியிட வைத்து அதை வைத்து ஒரு சிபிஐ விசாரணை வேண்டும் என அரசை தாக்கி பல்வேறு அரசியல் கட்சிகள் அறிக்கை விட ஏதுவாக செய்தார்கள். இறுதியில் இது சம்பந்தமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அறிவிப்பு அனுப்பி சட்டபூர்வ நடவடிக்கை தொடங்கிய உடன் மேற்கண்ட பத்திரிக்கையிலேயே அந்த செய்தி தவறு என்பதை தெரிந்து அது எந்த ஆதாரங்களையும் பரிசீலிக்காமல் நிலுவையில் உள்ள ஒரு ரிட் மனுவின் அடிப்படையில் மட்டுமே போடப்பட்டது. தவறுக்கு வருந்துகிறோம் என சிறிதாக முடித்து விட்டார்கள். இது கடந்த 17.05.2015 அன்று எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிலேயே தவறுக்கு வருந்துகிறோம் என வெளியிட்டார்கள். எனவே ஊடகங்கள் அவர்களது வாசகர்கள் வட்டத்தை பெருக்குவதற்காக இவ்வாறு மிகைப்படுத்தி அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆதாரம் கீழே.

Pic 24

சிபிஐ விசாரணைக்கு அல்லது இதர விசாரணைக்கு உங்களுக்கு என்ன ஆட்சேபணை என கேட்கலாம். இந்தியா போல் அல்ல இதர நாடுகள். வளர்ந்த நாடுகளுக்கும் ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் வி.வி.மினரல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடுகளின் சட்டப்படி எதாவது ஒரு நிறுவனத்திற்கு எதிராக ஒரு சட்டபூர்வ வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அந்த நிறுவனத்திடம் இருந்து மேற்கண்ட நாட்டின் நிறுவனங்கள் எந்த பொருளையும் வாங்க முடியாது. எனவே இவ்வாறு ஒரு விசாரணை என கேட்டு அதற்கு உத்தரவு பெற்றாலே தன்னால் 25 வருடங்களாக போராடி நிறுத்த முடியாத வி.வி.மினரல் நிறுவனத்தின் விற்பனையை நிறுத்தி வைக்க முடியும். இந்த உள்நோக்கத்தோடு தான் பல்வேறு அரசியல்வாதிகள், பத்திரிக்கையார்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஆகியோரை வைத்து தொழிற் போட்டியினால் திரு.தயாதேவதாஸ் இந்த செயல்களை செய்து வருகிறார்.

உலகத்தில் 30 வெள்ளி காசுக்காக ஏசுபிரானையே காட்டி கொடுத்த சீடர்கள் இருக்கும் போது திரு.தயாதேவதாஸ் வீசி எறியும் சில லட்சங்களுக்காக ஓய்வு பெற்ற அதிகாரிகள் பேட்டி கொடுப்பதிலும் புகார் எழுதுவதிலும் என்ன ஆச்சரியம்!! ஆனால் தோழர் வெற்றிவேல் கூறியது போல் இவர்கள் அறிவை காசுக்காக விற்பவர்கள். இவர்கள் எந்த புகாரிலாவது வி.வி.மினரல் உரிமம் இல்லாத இந்த புல எண்ணில் அல்லது இந்த கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளி இருக்கிறார்கள் என கூற மாட்டார்கள். அல்லது அவர்கள் அரசுக்கு ராயல்டி செலுத்தியது குறைந்த அளவு. ஆனால் ஏற்றுமதி செய்ததது அதை விட அதிகம். இதோ அதற்கான ஆதாரம் என கூற மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து இல்லீகல் மைனிங் என்பதை உடைந்த ரெக்கார்ட் போல் சொல்வார்கள். இவர்கள் இவ்வாறு வேகமாக கூறுவதற்கு காரணம் அரசு அதிகாரிகள் அவர்கள் செய்த சட்ட விரோத செயலை கவனிக்காமல் இருக்க தான்.

வி.வி.மினரல் நிறுவனத்தை பொறுத்த வரையில் சட்டத்திற்கு உட்பட்டு நியாயப்படி நடக்கும் நிறுவனம். சட்ட விரோதமாக எந்த செயலையும் செய்வதில்லை. இதனால் தான் கடந்த 21 வருடங்களாக இந்திய அரசிடம் இருந்து சிறந்த ஏற்றுமதியாளர் விருதை தொடர்ந்து பெற்று வருகிறது. தூத்துக்குடி துறைமுக சபையில் இருந்து கடந்த 10 வருடங்களாக அதிக அளவு ஏற்றுமதி செய்தவர்கள் என்ற விருதையும் பெற்று வருகிறது. சட்டவிரோதமாக இதில் எந்த பணியும் செய்ய முடியாது. ஏனென்றால் இது 18 துறைகளில் அனுமதி பெற்று செயல்படும் ஒரு நடவடிக்கை. இதனால் தான் முதலில் சட்டவிரோத சுரங்க பணி என்று கூறியவர்கள் அதன் பிறகு தங்கள் புகாரை மாற்றி தோரியம் நிறைந்த மோனோசைட்டை ஏற்றுமதி செய்து விட்டார்கள் என கூறினார்கள்.

உண்மையில் மோனோசைட் ஏற்றுமதியே செய்யப்பட முடியாது. மோனோசைட் இருந்தால் அந்த சரக்கையே யாரும் வாங்க மாட்டார்கள். மேலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதியாகும் பொருட்களில் மோனோசைட் அல்லது இதர கதிரியக்க பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை சுங்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தான் ஏற்றுமதி அல்லது இறக்குமதியை அனுமதிப்பார்கள். அந்த ஆய்விற்கு தேவையான உபகரணங்கள் அவர்களிடமே உள்ளது. மேலும் கதிரியக்க பொருள் கப்பலில் இருந்தால் கப்பல் மாலுமிகளுக்கு ஆபத்தாகி விடும் என்பதால் கப்பலிலும் கதிரியக்க பொருள் ஏற்றுமதி செய்யப் பட்டால் அலாரம் அடிக்கும் வசதி உண்டு. எனவே திருட்டுதனமாகவே மறைமுகமாகவே இதனை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும் இந்தியாவை தவிர இதர எல்லா நாடுகளிலும் மோனோசைட் விலை மலிவாகவே கிடைக்கிறது. இதனால் இந்திய அரசாங்கம் கூட 2004-ல் இருந்து மோனோசைட் உற்பத்தியையே நிறுத்தி விட்டது. இதனை பாராளுமன்றத்தில் பிரதமர் சார்பாக ராஜ்யசபாவில் குறியிடப்படாத கேள்வி எண் 420-க்கு 26.11.2014 அன்று கொடுக்கப்பட்ட பதிலில் தெரியலாம். இணைப்பு : http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=111923

வி.வி.மினரல் மற்றும்; அதன் பங்குதாரர் திரு.வைகுண்டராஜன் பற்றி திட்டமிட்டு பரப்பப் படும் ஒரு பொய் பிரச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இவை வெளியிடப் படுகிறது.

மேலதிக தகவலுக்கு  வி.வி.மினரல் இணையதளத்தையும், முகநூலில் VV Mineral News Release, www.southernmines.org , www.coastalenviroment.org–ம் பார்த்துக் கொள்ளலாம். மேலும் விபரம் வேண்டும் என்றால் அதற்கும் தயார்.

இந்திய போட்டியை சமாளிக்க முடியாமல் உலகில் No.1 இலுக்கா மைன்ஸ் அதன் சுரங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது

http://www.smh.com.au/business/mining-and-resources/iluka-resources-lobs-lowered-bid-for-kenmare-20150430-1mx9p4.html

உலகிலேயே பெரிய தாதுமணல் நிறுவனம் இலுக்கா மைன்ஸ் விலை குறைவு மற்றும் நஷ்டத்தினால் அதற்கு மொசாம்பிக் நாட்டில் உள்ள சுரங்கத்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. இலுக்கா மைன்ஸ் என்பது உலகில் உள்ள மிகப் பெரிய தாதுமணல் நிறுவனங்களில் ஒன்று. இதற்கு பல்வேறு நாடுகளிலும் சுரங்கங்கள் உள்ளன. சிர்கான் உற்பத்தில் உலகில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சமீப காலமாக ஏற்பட்ட விலைகுறைவு போன்ற இதர காரணங்களால் அந்நிறுவனம் மொசாம்பிக் நாட்டில் சுமார் 22500 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ள சுரங்கம், தொழிற்சாலை, தளவாடங்கள் அனைத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 22500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை, சுரங்கம் அத்தனையையும் 2500 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் விற்பனை இன்னும் முடிவாகவில்லை. ஆஸ்திரேலியா நிறுவனம் அதிலும் விலை குறைத்து கேட்கிறது.

உலகில் ஏகபோகமாக  இந்த தொழிலில் இருந்த நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் தாதுமணல் வளர்ச்சியால் தொடர்ந்து நஷ்டம் கண்டு வந்தன. இவைகள் எல்லாம் பெரும் தொகையை செலவு செய்து தாது மணலுக்கு எதிராக இந்தியாவில் திட்டமிட்ட பிரச்சாரத்தையும், பொய் புகார்களையும், பொய் வழக்குகளையும் உண்டாக்கி வருகின்றன. இவற்றின் பின்னணியில் வெளிநாட்டு நிறுவனங்களின் சதி உண்டு என இந்திய தாது மணல் உற்பத்தியாளர் சங்கம் கடந்த நான்கு வருடங்களாக கூறி வரும் புகார் உண்மை தான் என்பது ஊர்ஜிதமாகிறது.

Prime Minister should introduce Make in India Scheme in Rare Earth Industry to full fill domestic Requirement.

Monazite: Major Rare-Earth Mineral

  • A phosphate mineral containing 50-60% rare earths.
  • The world’s original commercial rare-earth source, simple and well-understood metallurgy.
  • Significant quantities are concentrated during heavy-minerals-sands processing — currently, monazite is discarded or stockpiled.
  • Major heavy-mineral-sands producers are:

By Surface Mining there is no chance for any Environment affect – Nooral Islam College Principal confirm

During the Public Hearing for Environmental Clearance of IREL held on 22.03.2013, Nooral Islam Arts College Principal confirms that “By surface mining, there is no chance for any environment affect. If any environment affect is there, nobody can construct house in this area. They are removing the minerals, hence background radiation is decreasing. There is no chance for radiation increasing”. – This will confirm that all the pre-planned false propaganda made against Beach Minerals are false.

 

Thiru. Umaiorubagan, Principal, Nooral Islam Arts College:

My name is Umaiyorubagan, Principal, Nooral Islam Arts College. I am working as professor in Chemistry for the last 35 years. From the Socio economic, environment point of view, most of people discussed about social and economic related development. The people said it is the only public sector and functioning for the last 100 years. Surface mining is being carried out in this organization. By surface mining, there is no chance for any environment affect. If any environment affect is there, nobody can construct house in this area. They are removing the minerals, hence background radiation is decreasing. There is no chance for radiation increasing.

Development and pollution are two sides of the same coin. If we wish to live without pollution, we should go to ancient time in future. IREL is not following any chemical process in their process. They are doing only physical separation like our mothers are separating stones from the rice in houses. By this physical separation, no affect in environment. This is my view. Also there is no argument in that. So to the best of my knowledge. I feel that this work this should continue. Thank you.