உள்ளூர் வேலைவாய்ப்பு
கனிம செயலாக்கம் மூன்று பகுதிகளை கொண்டது:
- கனிமத்திரட்டு அகழ்வெடுக்கப்பட்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுதல்
- கனிமங்களை பிரித்தெடுத்தல்
- விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்
உள்ளூர் மக்களை மட்டுமே அகழ்வெடுக்கவும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என BMPA வின் உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் சுமார் 50000 பேர் நேரடியாகவும், 300000 பேர் மறைமுகமாகவும் பயனடைகின்றனர். தனித்திறன் அடிப்படையில் தகுதி இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இன்னும் அதிக தனித்துவம் வாய்ந்த வேலை அளிக்கப்படுகிறது.
உள்ளூர் மக்களின் திறன் மேம்பாடு
அகழ்வெடுக்கும் பகுதிகளுக்கு அருகே BMPA வின் உறுப்பினர்கள் பொறியியல் கல்லூரிகள் நடத்துகின்றனர். உள்ளூர் மக்களுக்கு கல்லூரி மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வறுமையில் வாழும் பெண் குழந்தைகள் படிப்பதற்காக உதவித்தொகையும் வழங்குகிறார்கள். குக்கிராமங்களில் உயர்தர கல்வி கிடைக்கும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அகழாய்வு வேலைகளிலும் புவியியல் சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு உறுப்பினர்களின் ஆலைகளில் நேரடி பயிற்சியும் வழங்கப்படுகிறது. டைட்டானியம் தனிமங்களின் உற்பத்தியில் இந்தியா முன்னணி வகிப்பதால், உள்ளூர் மக்களுக்கு உபகரணங்கள் பயன்படுத்தும் வாய்ப்புகளும் பயிற்சியும் வழங்கப்படுகின்றன.
மக்கள் நல்வாழ்வு
பணியாளர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோரின் நல்வாழ்வினை உறுதி செய்யவேண்டியது BMPA உறுப்பினர்களின் பொறுப்பாக பணிக்கப்பட்டுள்ளது. சிறியளவிலான உடல்நிலை குறைபாடு முதல் பெரியளவிலான நோய்கள் வரை, ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அவசரகால சிகிச்சைகள் பணமில்லாமல் அளிக்கப்பட்டு மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஏற்படும் செலவுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
வருடத்திற்கு இரண்டு இலவச மருத்துவ முகாம்கள் BMPA வின் உறுப்பினர்களால் கடலோரப்பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கடற்கரை கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச கழிப்பறை வசதியும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
உள்ளூர் மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கும் பொருட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முழுநேரமும் பணியாற்றும் வகையில் 24 மணிநேர இலவச சுகாதார மையம் இயங்குகிறது.
கல்வி
உள்ளூர் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், பள்ளிச்சீருடைகள், பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி என உள்கட்டமைப்புக்கு தேவையான இதர உதவிகளையும், கடலோரப்பகுதிகளை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் BMPA வின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் BMPA உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ள மொழி ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு மாணவர்களின் மொழி ஆற்றலும், நேர்காணலை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மகளிர் மேம்பாடு
கடலோர கனிம வளத்தொழிற்துறையில் பணிபுரியும் வகையில் மகளிருக்கான தொழில் முனைவோர் திட்டங்களை BMPA அளிக்கிறது. துறை சம்பந்தப்பட்ட இதர சங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், கடலோர பகுதிகளில் வாழும் பெண்களின் முன்னேற்றத்தையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட கடலோர கிராமிய பெண்கள் தனி சுயஉதவி குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்குழுக்களின் மேம்பாட்டிற்காக கோடிக் கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சமுக நலனுக்கான முன்னெடுப்புகள்
உள்ளூர் மக்களின் அங்கமாக நம் உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். கல்வி நிலையங்களுக்கும் மகளிர் மேம்பாட்டுக்கும் உதவுவதோடன்றி, சாலை வசதி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நோய்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், ரத்த தான முகாம்கள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்த உதவுகின்றனர்.